வாக்கு எண்ணும் நிலையங்களில் தினமும் இருமுறை ஆய்வு செய்ய உத்தரவு

வாக்கு எண்ணும் நிலையங்களில் தினமும் இருமுறை ஆய்வு செய்ய உத்தரவு

2 mins read
f99a126a-f3b7-49dc-89e7-957fde3ddc79
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களைத் தேர்தல் அதிகாரிகள் தினமும் கண்காணித்து வருகின்றனர். - படம்: தமிழ் இந்து

சென்னை: தமிழகத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. இருப்பினும் வாக்கு எண்ணும் நிலையங்களில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தினமும் இரண்டு முறை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2026 தமிழக சட்​டமன்றத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு ஏப்ரல் 23ஆம் தேதி நடை​பெற்​றது. இந்தத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் ‘விவி​பாட்’ இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன.

வாக்​குப்​ப​திவு முடிந்த பின்​னர், 62 இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்கு எண்​ணிக்கை நிலையங்களில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

அதைத்​தொடர்ந்​து, வாக்​குச்​சாவடிகளில் ஏதேனும் முறை​கேடு​கள் நடந்​திருந்​தால் அதைக் கண்​டறிந்​து, தேவைப்​பட்​டால் மறு​வாக்​குப்​ப​திவுக்​குப் பரிந்​துரைக்​க​வும், படிவம் 17ஏ (வாக்​காளர் வரு​கைப் பதிவேடு) மற்​றும் வாக்​குப்​ப​திவு நாளன்று பயன்​படுத்​தப்​பட்ட பிற தேர்​தல் ஆவணங்​களை வாக்​குப்​ப​திவுக்​குப் பிந்​தைய சரி​பார்ப்பு குறித்த ஒருங்​கிணைந்த அறி​வுறுத்​தல்​களை இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டிருந்​தது.

அதன்​படி, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற அனைத்துத் தொகு​தி​களி​லும், ஏப்ரல்​24ஆம் தேதி பொதுப் பார்​வை​யாளர்​கள், 1,825 வேட்​பாளர்​கள் அல்​லது அவர்​களது பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் தேர்​தல் அலு​வலர்​களால் ஆவணங்​கள் சரி​பார்ப்பு நடத்​தப்​பட்​டது. வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற 75,064 வாக்​குச்​சாவடிகளிலும் சரி​பார்ப்​புக்குப் பிறகு எந்​தவொரு வாக்​குச்​சாவடி​யிலும் மறுவாக்​குப்​ப​திவுக்கு பரிந்​துரைக்​கப்​பட​வில்​லை.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்ள பாது​காப்பு அறை​களுக்கு இரட்​டைப் பூட்டு முறை, 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் இரண்டடுக்குப் பாது​காப்பு போடப்பட்டுள்​ளது. பாது​காப்பு அறை​களுக்கு ஒரு நாளில் இரு​முறை தேர்​தல் நடத்​தும் அதிகாரிகள் நேரில் சென்று ஏற்​பாடு​களைச் சரி​பார்க்க வேண்​டும்.

அதே​போல், தலை​மையகத்​தில் உள்ள பாது​காப்பு அறை​களுக்கு மாவட்​டத் தேர்​தல் அதி​காரி​கள் தின​மும் ஒரு​முறை​யும், தலை​மையகத்​துக்கு வெளியே உள்ள அறை​களுக்கு மூன்று அல்​லது நான்கு நாட்​களுக்கு ஒரு​முறை​யும் நேரில் சென்று ஆய்​வுசெய்ய வேண்​டும் என தேர்​தல்​ ஆணை​யம்​ உத்தரவிட்டுள்​ளது.

கண்காணிப்பு கேமரா மூலமாக 24 மணி நேரமும் ஸ்ட்ராங் ரூம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையத்திலும் தலா 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 62 வாக்கு எண்ணும் நிலையங்களின் சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்