சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சரிசி, பாகுவெல்லம் அரைகிலோ, பாசிப்பருப்பு 100 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி, ஆவின் நெய் 50 கிராம் ஆகியன பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சில்லறை விற்பனை நிலையங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை செய்யப்படும்.
பொங்கல் தொகுப்பு ரூ.199க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999க்கும் விற்கப்பட உள்ளது.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் தமிழக அரசால் குறைந்த விலை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.