ஊழல் ஒழிப்புத் தனிப்​பிரிவு தொடக்கம்: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு

ஊழல் ஒழிப்புத் தனிப்​பிரிவு தொடக்கம்: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு

1 mins read
d6d9e977-0b4e-4efe-8d25-d093b67907e3
காவலர்​கள் யாரும் உயர் அதி​காரி​களைக் குளிர்விக்​கப் பணம் செலவு செய்​யத் தேவை​யில்​லை என்றும் தமக்காகவும் யாரும் எந்​த​விதத் தேவையில்லாத செல​வு​களை​யும் செய்ய வேண்​டாம் என்றும் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். - சித்திரிப்புப் படம்: ஐபிசி மீடியா
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: எந்தச் சூழலிலும் லஞ்சம் வாங்கக் கூடாது எனக் காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

சென்னை காவல்துறை சார்பாக ‘ஊழல் ஒழிப்புத் தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்தப் பிரிவுக்கென தனி வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த எண்ணை நேரடியாகத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

காவலர்​கள் யாரும் உயர் அதி​காரி​களைக் குளிர்விக்​கப் பணம் செலவு செய்​யத் தேவையில்லை என்றும் தமக்காகவும் யாரும் எந்​த​விதத் தேவையில்லாத செல​வு​களை​யும் செய்ய வேண்​டாம் என்றும் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

காவல்நிலை​யத்துக்குப் புகாருடன் வருபவர்​களின் மனு​வில் உள்ள உண்​மைத்தன்​மையை மட்​டுமே பார்க்க வேண்​டும் என்றும் மாறாக, புகார்தாரர்களின் பின்​னணி, பணபலம் குறித்து ஆராயக்கூடாது என்றும் ஆணையர் அமல்ராஜ் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்