சென்னை: திருவள்ளுவர் தின மான நேற்று பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசினார். "தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங் களில் அதிகமாக இருந்த முதிய வர்களின் எண்ணிக்கை குறைய மதுவே காரணம். தமிழக அரசின் வருமானத்துக்காக 20% மக்கள் மதுபோதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா? தற்போது ஆட்சியில் உள்ள அரசும், இனி வரப்போகிற அரசும் சரி மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தால் தமிழர்கள் கொண்டாடுவர்," எனக் கூறினார்.
வைரமுத்து: 20% மக்கள் மது மயக்கம்
1 mins read

