சென்னை: தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவி தங்களைத் தவிர்ப்பதற்காக பாது காப்புப் பணியில் சுமார் ஒரு லட்சம் போலிசார் ஈடுபடவுள்ளனர்.
குடியரசு தின விழா வரும் சனிக்கிழமை 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண் டாடப்படவுள்ளது. தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், போலிசாரின் அணி வகுப்பு உள்ளிட்டவை நடை பெற உள்ளன.
இதைத் தவிர்த்து பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பாக குடியரசு தினம் கொண் டாடப்படவுள்ளது. அந்த சமயத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது. இப் பணியில் சுமார் ஒரு லட்சம் போலி சார் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ரயில் நிலைங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்படுகி றது. சென்னையைப் பொறுத்தவரை போலிசார் இரவு ரோந்துகளிலும் வாகனத் தணிக்கையிலும் அதிகம் ஈடுபடுவர்.
சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை பார் வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அங் கும் வாகன சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் அனுமதி ரத்து; ஒரு லட்சம் போலிசார் குவிப்பு
22 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jan 2019 10:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!