விராலிமலை: புதுக்கோட்டை அருகே எரிவாயு கலன் கசி வால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரின் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். இம்மாதம் 17ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த பொன்னுமணி, 28, சமையல் செய்துகொண்டிருந்தார். அவருடைய 3 வயது மகனும் 2 வயது மகளும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எரிவாயு கலனில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. மூவரும் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வீடு முழுவதும் பரவிய தீ மூவர் மீதும் பற்றிக்கொண்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து 3 பேரையும் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மூவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
எரிவாயுக் கசிவால் தீ விபத்து; தாயும் இரு குழந்தைகளும் பலி
1 mins read

