விராலிமலை: புதுக்கோட்டை அருகே எரிவாயு கலன் கசி வால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரின் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
இம்மாதம் 17ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த பொன்னுமணி, 28, சமையல் செய்துகொண்டிருந்தார். அவருடைய 3 வயது மகனும் 2 வயது மகளும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எரிவாயு கலனில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. மூவரும் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வீடு முழுவதும் பரவிய தீ மூவர் மீதும் பற்றிக்கொண்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து 3 பேரையும் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மூவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
எரிவாயுக் கசிவால் தீ விபத்து; தாயும் இரு குழந்தைகளும் பலி
23 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!