சென்னை: கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "கோட நாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்ததோடு மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டனர். ஒருவர் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டு அவர் தப்பியுள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
"இவை அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச் சாட்டாக வைக்கப்படுகிறது. எனவே அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல்விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டு மெனவும் வலியுறுத்தி நாளை காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும்," என தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவி விலகக் கோரி நாளை திமுக ஆர்ப்பாட்டம்
23 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!