முதல்வர் பதவி விலகக் கோரி நாளை திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை 24ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "கோட நாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்ததோடு மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டனர். ஒருவர் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டு அவர் தப்பியுள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
"இவை அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச் சாட்டாக வைக்கப்படுகிறது. எனவே அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல்விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டு மெனவும் வலியுறுத்தி நாளை காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும்," என தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!