திருச்சி: நாடெங்கும் வங்கியில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து வருகின்றன. திருச்சி, சமயபுரம் டோல்கேட் பகுதி அருகே இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங் கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து லாக்கர்களை உடைத்து, அதில் இருந்த பல கோடி மதிப்பி லான பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும் வங்கியின் முக்கிய லாக்கர்கள் உடைக்கப்படாமல் பாதுகாப்பாகவே இருக்கின்றன என்று காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.
கடந்த சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் நேற்று மீண்டும் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது வங்கியின் வெளிப்புறம் வழக்கம்போலவே காட்சியளித்துள்ளது.
கதவைத் திறந்து வங்கிக்குள் சென்று பார்த்தபோது வங்கியின் பின்பக்க சுவரில் துளையிட்டுக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, வங்கியில் இருந்த ஐந்து லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக் கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் லாக் கர்கள்தான்.
கொள்ளையர்கள் லாக்கர்களை உடைக்கப் பயன்படுத்திய வெல்டிங் இயந்திரம், எரிவாயு உருளை உள்ளிட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
வங்கிச் சுவரில் துளையிட்டு ஐந்து கோடி பணம், நகைகள் கொள்ளை
29 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jan 2019 09:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!