15 காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை

திருவண்ணாமலை: திருவண்ணா மலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 15 சிறுமிகளிடம் அசிங்கமான படங்களைப் பார்க்க வற்புறுத்தி அவர்களுக்குப் பாலி யல் தொல்லை கொடுத்து வந்த காப்பக நிர்வாகி வினோத்குமாரை போலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது போக்சோ சட்டத் தின்கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ரமணா நகர் அருகே பாபு என்பவ ருக்குச் சொந்தமான 'அருணைக் குழந்தைகள் காப்பகம்' உள்ளது.
இங்கு பெற்றோர், உற்றார் உறவினர் ஆதரவின்றி வசிக்கும் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் கொடுத்துவந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்காப்பகத்தில் தங்கியுள்ள பெண் குழந்தைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கு ஆபாச படங்களைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர் கந்தசாமி உடனடியாக களத்தில் இறங்கினார். காப்பகத் தில் ஆய்வு செய்தபோது பாலியல் சம்பவம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து காப்பகத்தில் இருந்த 15 குழந்தைகளை அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மற்றும் காப்பகத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் காப்பகம் சீல் வைக்கப்பட்டு, அதில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!