ஈரோடு சந்தையில் மாடு விற்பனை அமோகம்

ஈரோடு: ஈரோடு மாட்டுச் சந்தை யில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன.
கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை நேற்று முன்தினம் நடந்தது.
இதில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.
பசுக்கள் 10,000 முதல் 32,000 ரூபாய் வரையில் விற்கப்பட்டன. கன்றுகள் ஒவ்வொன்றும் 12,000 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
எருமைகள் 14,000 முதல் 40,000 ரூபாய் வரை விற்பனை யாயின. இந்தச் சந்தையிலிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் விவசாயிகளும் மாடுகளை வாங்கிச் சென்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த மாட்டுச் சந்தை நிர்வாகி, "ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பபட்டன. இதில் 80 விழுக்காடு மாடுகள் மூன்று கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனை யாகின," என்றார்.
இதே ஈரோட்டில் புன்செய்புளியம் பட்டியில் நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 20 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 80 கன்றுகள், 250 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்பட்டன.
இங்கு ஆடு, மாடு உள்பட கால்நடைகள் 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!