சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் நடிகர் ரஜினியும் மீண்டும் சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் களத்தில் புதுப்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி தனது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக் கான அழைப்பிதழை அளிக்கவே திருநாவுக்கரசரின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்பட்டாலும், அங்கு அரசியல் குறித்துப் பேசப் பட்டது உண்மைதான் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை திருநாவுக்கரசர் வீட்டுக்கு ரஜினி சென்றிருந்தபோது அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இருந்தது மேலும் பல ஆரூடங்க ளுக்கு வழிவகுத்துள்ளது.
ரஜினி கிளம்பிச் சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு நாவுக்கரசர், இருவரும் நாட்டு நடப்புகள், பொதுவான அரசியல் சூழ்நிலைகள் குறித்துப் பேசிக் கொண்டதாகத் தெரிவித்தார். "கட்சி தொடங்காவிட்டாலும் கூட ரஜினியும் அரசியல் தலைவர்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம் முதலே ரஜினி அரசியல் பேசி வருகிறார். அவருடன் பேசிய தில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்று மில்லை," என்றார் திருநாவுக்கரசர்.
ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்று எழுப்பப்பட்ட கேள் விக்கு, "இதுகுறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்," என்றார் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர், ரஜினி, திருமாவளவன் சந்திப்பால் அரசியல் களத்தில் புது பரபரப்பு
7 Feb 2019 00:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!