சேலம்: அடித்தட்டு மக்கள் குறித்து தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு கவலை இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அருந்ததியர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது எனக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலை மன தில் வைத்தே விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் தருவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது என்றும், இது வாக்களிக்க அளிக்கப்படும் லஞ்சம் என்றும் ஸ்டாலின் சாடினார்.
"பொருளாதாரத்தில் பின்தங் கிய மக்களுக்குச் சலுகை அளிக்க லாம். ஆனால் உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதை ஒருபோதும் ஏற்க இயலாது.
"தற்போது மத்தியில் நடப்பது மோடி அரசு அல்ல. அது மோசடி அரசாகும். ஏனெனில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் அப் படி எதுவும் நடக்கவில்லை," என் றார் ஸ்டாலின்.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட் டிய அவர், இதன் காரணமாகவே விவசாயிகள் டெல்லியில் திரண்டு அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதாகவும் இது தேசத் துக்கே அவமானம் என்றும் தெரிவித்தார்.
"ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது சகோ தரர் தனபால் குற்றம்சாட்டி வருகிறார்.
"இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனவே அதிமுக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றார் மு.க. ஸ்டாலின்.
ஸ்டாலின்: மோடி அரசு அல்ல, மோசடி அரசு
11 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:07

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!