கோவை: தனது மூளை காணா மல் போய்விட்டதாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்த ஆடவரால் கோவையில் குழப்பம் நிலவியது.
நேற்று முன்தினம் காலை ஹரிகிருஷ்ண மூர்த்தி என்ற 55 வயது மதிக்கத்தக்க ஆடவர், கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்குள்ள வரவேற்பாளரிடம் அவர் மனு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து அங்கிருந்த போலிசார் அவரது புகார் குறித்து விவரம் கேட்டனர். அதற்கு ஆணையரிடம் மட்டுமே விவரம் தெரிவிக்க முடியும் என்றும், மற்றவர்களிடம் பேச விருப்பம் இல்லை என்றும் அவர் திட்டவட்ட மாகக் கூறினார்.
அதிகாரிகள் அதற்கு அனு மதி மறுத்த போது, திடீரென ஆணையரின் அறையை நோக்கி ஓடத் துவங்கினார் ஹரிகிருஷ்ண மூர்த்தி. அதிர்ந்துபோன போலி சார், அவரை விரட்டிப் பிடித்து விசாரணையை தீவிரமாக்கினர்.
அப்போது தனது மூளையைக் காணவில்லை என்றும், யாரோ தம்மை ஏமாற்றி அதை திருடி விட்டதாகவும் கூறினார் ஹரி. மேலும் தமது மூளையை வைத்து யாரோ சதி செய்வதாகவும், தம்மால் எதையுமே யோசிக்க முடியவில்லை என்றும் அவர் புலம்பலுடன் தெரிவித்தார்.
எனவே காவல் ஆணையரைச் சந்தித்து புகார் தர வேண்டும் என்றும் அவர் கூறியதைய டுத்து, அவரிடம் இருந்த சில கோப்புகளை போலிசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்தது.
இதன் பின்னர் அவரது முகவரியைக் கண்டுபிடித்து வீட் டுக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மூளையைக் காணோம் என்ற புகாரால் போலிசார் குழப்பம்
13 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!