இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துக் களமிறங்குவது கிட் டத்தட்ட உறுதியாகிவிட்டது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களுக்குமுன் பாஜக வுடன் கூட்டணி வைக்க அதிமுக தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவிப் பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அரசியல் அரங்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதற்கு முன்னர் கூட்டணி உறுதியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய நாளில் கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யகக் கூட்டணி அரசு தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் அதனால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்றும் அதிமுக பேச்சாளர் சி.பொன்னையன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அதோடு, மக்களவை துணை சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பி துரை பாஜக எதிர்ப்பு நிலையைக் கையாண்டு வருகிறார். அண்மை யில் தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
"மக்கள் நலனில் உண்மை யிலேயே அக்கறை இருந்திருந்தால் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு பல்வேறு நலத் திட் டங்களை அறிவித்திருக்க முடியும். ஆனால், பொதுத் தேர்தலை மைய மாக வைத்தே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பல திட்டங் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது வரவுசெலவுத் திட்ட அறிக்கை அல்ல, பாஜகவின் தேர்தல் அறிக்கை," என்று தம்பிதுரை சாடியிருந்தார்.
ஆனால், தமிழகத்தில் எப்படி யேனும் காலூன்றத் திட்டமிடும் பாஜக, கடந்த ஓராண்டாகவே அதிமுகவுடன் கூட்டணி தொடர் பாகப் பேசி வருவதாகக் கூறப்பட் டது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இறந்தபின் வலுவிழந்து விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், தொண்டர்கள் விரும்பா விடினும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுவிட்டதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறு கின்றனர்.
பாஜக-அதிமுக கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதி
14 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2019 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!