2 நாட்களில் 4 லட்சம் பேர் பயணம்

2 நாட்களில் 4 லட்சம் பேர் பயணம்

1 mins read

சென்னை: இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலை யங்களில் கடந்த இரு தினங்களாக மக்கள் கூட்டம் அலை மோதியது. தினமும் 1.25 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்று வதை இலக்காகக் கொண்டு மெட்ரோ ரயில் சேவை துவங்கப் பட்டது. ஆனால், தற்போது 55,000 பேர் மட்டுமே இதைப் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து மெட்ரோ ரயிலை விளம் பரப்படுத்தும் வகையில் இரு தினங்களுக்கு மட்டும் (13,14ஆம் தேதி) கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு தினங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 3வது நாளாக இலவச பயணம் அனுமதிக்கப்பட்டது.