கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில்  பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாகூர்: நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச் சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது. இதில், பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் நாகூர் ஆண் டவர் தர்காவில், நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன்னிட்டு 462ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த 6ஆம் தேதி இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது.
சந்தனக் குடம் வைக்கப்பட்டி ருந்த அலங்கார ரதத்துக்கு முன் னும் பின்னும் சிறியதும், பெரி யதுமான ரதங்கள் சென்றன. ரதத் தின் பின்னால் சென்ற சிறுவர்கள் தாரை தப்பட்டை முழங்க உற் சாகமாக ஆடியபடி சென்றனர்.
ஊர்வலம் அண்ணா சிலை, ஆஸ்பத்திரி சாலை, புதிய பேருந்து நிலையம், ஏழைப்பிள்ளையார் கோயில், காடம்பாடி, பால்பண் ணைச்சேரி, நாகூரின் முக்கிய தெருக்கள் வழியாக நாகூர் ஆண் டவர் தர்காவைச் சென்றடைந்தது.
சந்தனக்கூடு ஊர்வலத்திலும் சந்தனம் பூசும் விழாவிலும் பல் லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜ யகுமார் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறை யினரும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர்.
வரும் 19ஆம் தேதி இரவு குர்ஆன் ஷரீப் ஹதியா செய்து புனிதக் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!