இணையத் தளங்களை முடக்கிய இந்தியக்குழு

சென்னை: பாகிஸ்தான் இணையத் தளங்களை இந்தியாவைச் சேர்ந்த இணைய ஊருடுவல் நிபுணர்கள் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
சுமார் 200 இணையத் தளங்கள் இதுவரை முடக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வர்கள் அண்மையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தினர். இதில் இந் தியப் பாதுகாப்புப் படைவீரர்கள் பலர் பலியாகினர். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழ்நி லை நிலவுகிறது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த இணைய ஊடுருவல் குழு ஒன்று பாகிஸ் தானுக்கு நூதன முறையில் எதிர்ப்பு காட்டி வருகிறது.
அக்குழவைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்தின் அதிகாரபூர்வ இணையத் தளங்களை முடக்கியுள்ளனர். மேலும் பல இணையத் தளங்களில் இக்குழுவினர் தொடர்ந்து ஊடு ருவி வருகின்றனர்.
இதுவரை பாகிஸ்தானைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் முடக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி 14ஆம் தேதியை தங்களால் மறக்க இயலாது என்றும் தீவிரவாதத் தாக்குதலை மன்னிக்க மாட்டோம் என்றும் முடக்கப்பட்ட இணைய தளங்க ளின் முகப்புப் பக்கத்தில் இந்திய இணைய ஊடுருவல் குழு குறிப்பிட்டுள்ளது. தவிர, தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு சமர்ப்பணம் என்ற வாசகமும் சில இணையத் தளங்களில் காணப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!