இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு தேர்தல் களம் காண்கிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக-பாமக கூட்டணி நீடிக்கும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் அதிமுகவிற்கும் ஆதரவில்லை என்றும் பாமக கூறியதாகத் தகவல் வெளியாகியது. இதற்கிடையே, தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இன்னும் பல கட்சிகள் தங்களது கூட்டணியில் இணையக் கூடும் என்றும் பழனிசாமி கூறியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும்
1 mins read
முதல்வர் எடப்பாடி பழனிசாமி -

