இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு தேர்தல் களம் காண்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக-பாமக கூட்டணி நீடிக்கும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் அதிமுகவிற்கும் ஆதரவில்லை என்றும் பாமக கூறியதாகத் தகவல் வெளியாகியது.
இதற்கிடையே, தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இன்னும் பல கட்சிகள் தங்களது கூட்டணியில் இணையக் கூடும் என்றும் பழனிசாமி கூறியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும்
27 Feb 2019 08:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!