உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி இன்று தொடங்கி 8ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கின்னஸ் சாதனை முயற்சியாக 10 ஆயிரம் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டிய இசைக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் இந்த நாட்டிய நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 7 ஆயிரத்து 195 கலைஞர்கள் கின்னஸ் முயற்சியில் பங்கேற்றனர். நேற்றுக் காலை 8.45 மணிக்குத் தொடங்கிய நடன நிகழ்ச்சி சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. இதற்கு முன்னர் சென்னையில் 2017ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரத்து 525 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியது இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
ஒரே நேரத்தில் அதிகமானோர் நடனமாடி கின்னஸ் சாதனை
4 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 09:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!