அதிமுக-பாஜக-பாமக கூட்டணியில் இணைகிறது தேமுதிக; இன்று இறுதி முடிவு அறிவிப்பு

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜகவுக்கு ஐந்து, பாமகவுக்கு ஏழு, புதிய தமிழகத்திற்கு ஒன்று, புதிய நீதிக் கட்சிக்கு ஒன்று எனத் தொகுதிகளை ஒதுக்கிவிட்ட நிலையில், விஜயகாந்தின் தேமு திகவையும் தன்பக்கம் இழுக்க அதிமுக பெரிதும் முயன்று வரு கிறது.
திமுக கைவிட்டுவிட்ட நிலை யில் அதிமுகவில் இணையவே தேமுதிகவும் விரும்புவதாகக் கூறப் படுகிறது. இருப்பினும் பாமகவைப் போலவே தனக்கும் ஏழு தொகுதி களை ஒதுக்கவேண்டும் என அக் கட்சி அடம்பிடிப்பதாகச் சொல்லப் படுகிறது.

அதோடு, எப்படியாவது விஜயகாந்தை கூட்டணிக்குக் கொண்டு வாருங்கள் என்று பாஜக தலைமை வலியுறுத்தி வருவதால் அதிமுக தவிப்பில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்தே, தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்தை ரகசியமாகச் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஐந்து நாடாளு மன்றத் தொகுதிகளையும் ஒரு மேலவைத் தொகுதியையும் தர அதிமுக ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு மேலவைத் தொகுதியையும் விஜயகாந்த் கேட்க, அதற்கும் ஓபிஎஸ் சம்மதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தாலும், சிக்கல் தீர்ந்த பாடில்லை. விஜயகாந்த் கேட்ட ஆறு தொகுதிகளில் நான்கு ஏற் கெனவே பாமகவுக்கு ஒதுக்கப் பட்டுவிட்டதாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!