இந்த மக்களவைத் தேர்தலுடன் பாஜக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். "ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பாஜகவுடன்தான் கூட்டணி வைத்திருப்பார் என்று கூறியது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
'மோடியா - லேடியா' என்று கடந்த தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரத்தை அதிமுகவினர் மேற் கொண்டனர்.
பலமுறை நேரில் வந்து பேசியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க கடந்த தேர்தலில் மறுத்தார் ஜெயலலிதா," என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.