சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப் பிடாரம், திருப்பரங்குன்றம் தொகு திகளுக்கு நாடாளுமன்றத் தேர்த லுடன் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று திமுக வைத்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றது, வெள்ளிக் கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர், திரு ஏ.கே.போஸ் மறையொட்டி திருப் பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்புக் காரணமாக அந்தத் தொகுதியும் சேர்ந்து 21 தொகு திகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவிப்பு வெளியானது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என்று எவ்வித உத்தரவும் தேர்தல் ஆணை யத்திற்குப் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மூன்று தொகுதி களுக்கான தேர்தலையும் நாடாளு மன்றத் தேர்தலுடன் சேர்த்தே நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நேற்று மனு அளிக்கப்பட்டது.
திமுகவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
1 mins read

