திமுகவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப் பிடாரம், திருப்­பரங்குன்றம் தொகு திகளுக்கு நாடாளுமன்றத் தேர்த லு­டன் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று திமுக வைத்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றது, வெள்ளிக் கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர், திரு ஏ.கே.போஸ் மறையொட்டி திருப் பரங்குன்றம் ஆகிய இரு தொகுதி­களும், ஓசூர் சட்டமன்ற உறுப்­பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்புக் காரணமாக அந்தத் தொகுதியும் சேர்ந்து 21 தொகு திகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்­பட்டது. ஆனால் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்­தேர்தல் என அறிவிப்பு வெளி­யானது.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்­பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என்று எவ்வித உத்தரவும் தேர்தல் ஆணை யத்திற்குப் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மூன்று தொகுதி களுக்கான தேர்தலையும் நாடாளு மன்றத் தேர்தலு­டன் சேர்த்தே நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நேற்று மனு அளிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!