காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச மாநி லத்தோடு மட்டும் அடைத்துவிடக் கூடாது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தமிழகத்திலும் ஒரு தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
"வடஇந்தியா, தென்னிந்தியா என இரு பகுதிகளாக இந்தியா பிளவுபட்டுக் கிடக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான கடந்த ஐந்தாண்டுகால தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியில் இந்தப் பிளவு அதிகமாகிவிட்டது. இப்படி பிளவுபட்டுக் கிடக்கும் இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டுமெனில் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்," என்று அழகிரி கூறி இருக்கிறார்.
தமது இந்தக் கோரிக்கையை ராகுல் காந்தியிடம் முன்வைத் தீர்களா என்று அவரிடம் கேட்ட தற்கு, தமிழ்நாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ராகுலுடன் சென்றபோது இவ்வேண்டுகோளை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டதைக் கேட்டதும் அவர் புன்முறுவல் பூத்தார். நாளை நான் மீண்டும் அவரைச் சந்திக்க இருக் கிறேன். அப்போதும் அவரிடம் இதை வலியுறுத்துவேன்," என்று அழகிரி கூறினார்.
ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கோரிக்கை
17 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!