சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் கணவன், மனைவி உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் கள், விவாகரத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஸ்ரீபெரும் புதூரைச் சேர்ந்தவர் சரவணன், மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவ ருக்கும் இவரின் மனைவி வர லட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு முதலா வது கூடுதல் குடும்பநல நீதி
மன்றத்தில் கடந்த ஐந்தாண்டு களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்காக இரு வரும் நேற்று நீதிமன்றம் வந்த னர். வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் நீதிமன்ற அறை யில் இருவரும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசி னர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதம் சண்டையாக மாறியது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் சரவணன் தம் மனைவி வர லட்சுமியின் நெஞ்சின் மீது கத்தி யால் குத்தினார். நீதிபதி இளங் கோவன் முன்னரே இந்தச் சம்ப வம் நடந்துள்ளது.
உடனே அங்கிருந்த காவலர் கள் சரவணனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கடுமையான காயத்துக்குள்ளான வரலட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கத்திக்குத்தை நேரடியாகப் பார்த்த நீதிபதி இளங்கோவன், சுமார் 30 நிமி டங்கள் வரை பேச்சுவார்த்தை இன்றி உறைந்து போனார்.
நீதிபதியின் கண்முன்னே பெண்ணுக்கு கத்திக்குத்து
20 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 10:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!