எதிர்க்கட்சி வேட்பாளராகக் களமிறங்கும் சித்தப்பாவால் தமிழிசைக்கு தர்மசங்கடம்

குமரி: தனது கட்சியின் மூத்த தலைவரான பொன் ராதாகிருஷ் ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள தமிழக பாஜக தலைவி தமிழிசை, தனது சித்தப்பாவான வசந்தகுமாரை தேர்தல் களத்தில் விமர்சிப்பாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகு தியில் பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் களமிறங்குகிறார். இவர் தமிழிசையின் சித்தப்பா ஆவார்.
இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமி ழிசை, மாநில பாஜக தலைவி என்ற வகையில், குமரியிலும் பிர சாரம் செய்வார் என எதிர்பார்க் கப்படுகிறது.
இதையடுத்து எதிர்க்கட்சி வேட்பாளரான வசந்தகுமாரை தாக்கிப் பேசி அவர் பிரசாரம் செய் வாரா? எனும் கேள்வி எழுந் துள்ளது.
அரசியல் நாகரிகள் என்று கூறி வசந்தகுமாரை விமர்சிக்கா விட்டால் கட்சித் தலைமையின் அதிருப்தியை தமிழிசை சம்பாதிக்க நேரிடும் எனக் கூறப்படு கிறது. இதனால் அவர் தர்மசங் கடத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!