வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்டம்  மாறி வந்த வேட்பாளர் வேதரெத்தினம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் வேதரெத்தினம் (50). நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த இவர், ஆட்சியரிடம் சுயேச்சை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவைப் பரிசீலித்த ஆட்சியர் உறுதிமொழி பெற்ற பின்னர் வேட்புமனுவில் கையெழுத்திட்டார். அந்த வேட்பு மனுவை சரிபார்த்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, "இவர் நாகப்பட்டினம் மக்கள வைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக் கிறார்," என்று ஆட்சியரிடம் கூறினார். உடனே மனுவை பார்த்த ஆட்சியர், "ஐயா, நீங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம்தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்," என்றார்.
"வட்டாட்சியர் இங்குதானே கொடுக்கச் சொன்னார்," என்று வேதரெத்தினம் பிடிவாதமாகக் கூறினார். உடனே, அருகில் இருந்த அலுவலர்கள் அவரை ஆட்சியர் அறையை விட்டு வெளியே அழைத்து வந்து சமாதானப்படுத்தி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!