டெல்லி: தமது உறவினர் என்ற போதிலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவி தமிழிசையை ஆதரிக்க இயலாது என கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது அண்ணன் மகளான தமிழிசைக்குத் தமது ஆசீர்வாதம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். "தேர்தல் களத்தைப் பொறுத்தமட்டில் உறவு, பாசம் என்பதற்கு இடமில்லை. தமிழிசை நிச்சயம் தேர்தலில் தோல்வி காண்பார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிதான் வெற்றி பெறுவார். இதில் சந்தேகமே இல்லை. கனிமொழியின் வெற்றிக்காக நான் கடுமையாக உழைக்கத் தயாராக உள்ளேன்" என்றார் வசந்தகுமார்.
தமிழிசையை ஆசீர்வதிக்கக்கூட இயலாது என்கிறார் வசந்தகுமார்
25 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!