மதுரை: மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராமனுக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் கும்பலால் எரிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்களான கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வன்முறையைத் தடுக்கத் தவறியதாக காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராமன் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறை
1 mins read

