இதுவரை ரூ.33.46 கோடி ரொக்கம், 209 கிலோ தங்கம் பறிமுதல்

இதுவரை ரூ.33.46 கோடி ரொக்கம், 209 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் இருக்கும் நிலையில், எந்தவித ஆவண மும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.46 கோடி ரொக் கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், 209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி மற்றும் பரிசுப்பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே ஊடகங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது. அந்த வகையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதிக்கு பிறகு எவரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது," என்றார் சத்யபிரத சாகு.