'காவிரி-கோதாவரி இணைப்பு உறுதி'

'காவிரி-கோதாவரி இணைப்பு உறுதி'

1 mins read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை ஆதரித்து அந்த நகரில் சனிக்கிழமை மாலை பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி, காவிரி- கோதாவரி இணைப்பு உறுதி என்று தெரிவித்தார். இதற்காக ரூ. 60,000 கோடியில் திட்ட மதிப்பீடு தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் தடுப்பணைகளைக் கட்டி, மழை நீரைச் சேமித்து, நிலத்தடி நீரை உயர்த்தி, விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். பிரசாரத்துக்கு முதல்வர் வருவது தெரியாத காரணத் தால் அவரின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடவில்லை.