ஆபாசப் படைப்புகளின் பரவலை ‘டிக் டோக்’ செயலி ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டு

'டிக் டோக்' செயலியைத் தடை செய்ய தமிழக உயர் நீதிமன்றம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தச் செயலி ஆபாசப் படைப்புகளின் பரவலை ஊக்குவிப்பதாக அந்த நீதிமன்றம் கூறுகிறது.

'பெய்ஜிங் பைட்டான்ஸ் டெக்னாலஜி' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி வழி சிறிய காணொளிகளை மக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்திய கிராமங்களில் 'டிக் டோக்' செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. செய்திகள், நகைச்சுவை எழுத்துகள் ஆகியவை இதன் மூலம் பரவி மக்களை மகிழ்வித்தாலும் அவற்றுடன் ஆபாசப் படைப்புகள் அதிக அளவில் பரவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதன்வழி பரவும் காணொளிகள் சில 'சகிக்க முடியாதவை' என்று தமிழகத்தின் தகவல், தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் எம் மணிகண்டன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தவறான பாலியல் விருப்பங்களைக் கொண்ட சிலர், இந்தச் செயலி வழியாகப் பிள்ளைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று குற்றம் சாட்டும் மனுவைத் தமிழக உயர் நீதிமன்றம் ஏற்றது.

'டிக் டோக்' செயலியின் பேச்சாளர் ஒருவர் தமது நிறுவனம் உள்ளூர் சட்டங்களை மதித்து நடப்பதில் கடப்பாடு கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!