'டிக் டோக்' செயலியைத் தடை செய்ய தமிழக உயர் நீதிமன்றம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தச் செயலி ஆபாசப் படைப்புகளின் பரவலை ஊக்குவிப்பதாக அந்த நீதிமன்றம் கூறுகிறது.
'பெய்ஜிங் பைட்டான்ஸ் டெக்னாலஜி' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி வழி சிறிய காணொளிகளை மக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்திய கிராமங்களில் 'டிக் டோக்' செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. செய்திகள், நகைச்சுவை எழுத்துகள் ஆகியவை இதன் மூலம் பரவி மக்களை மகிழ்வித்தாலும் அவற்றுடன் ஆபாசப் படைப்புகள் அதிக அளவில் பரவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதன்வழி பரவும் காணொளிகள் சில 'சகிக்க முடியாதவை' என்று தமிழகத்தின் தகவல், தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் எம் மணிகண்டன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தவறான பாலியல் விருப்பங்களைக் கொண்ட சிலர், இந்தச் செயலி வழியாகப் பிள்ளைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று குற்றம் சாட்டும் மனுவைத் தமிழக உயர் நீதிமன்றம் ஏற்றது.
'டிக் டோக்' செயலியின் பேச்சாளர் ஒருவர் தமது நிறுவனம் உள்ளூர் சட்டங்களை மதித்து நடப்பதில் கடப்பாடு கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.