சிதம்பரம் குடும்பத்தாருக்கு உத்தரவு

சிதம்பரம் குடும்பத்தாருக்கு உத்தரவு

1 mins read

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கறுப்பு பணம் சேர்த்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்க வருமான வரித்துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது வருமான வரித் துறை. இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.