தமிழகம்: ‘டிக் டொக்’ தடை தொடரும்

பிரபல காணொளிச் செயலியான 'டிக் டொக்' மீதான தடையை ரத்து செய்ய தமிழக உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த 'பைட்டான்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் முன்வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் அதன் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

வண்ண உயிரோவியங்களுடன் சின்னஞ்சிறு காணொளிகளை உருவாக்கிப் பகிர்வதற்குப் பயன்படும் இச்செயலி இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஆயினும், ஆபாசப் படைப்புகள் இந்தச் செயலி மூலம் பரவுவதாகச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய பரவலால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதையும் அவர்கள் சுட்டினர். இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றது.

தடை உத்தரவை ரத்து செய்ய 'பைட்டான்ஸ் டெக்னாலஜி' கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டிருந்தது. உச்ச நீதிமன்றமோ அந்த வழக்கை மாநில நீதிமன்றத்திற்கு மீண்டும் தள்ளியது. வழக்கை மறுபடியும் விசாரித்த மாநில நீதிமன்றம், அந்நிறுவனத்தின் வேண்டுகோளைத் திட்டவட்டமாக மறுத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!