சென்னை: உலகின் சிறந்த 50 பிரமுகர்களில் கோவையைச் சேர்ந்த முருகானந்தமும் (படம்) ஒருவர் என்று அமெரிக்காவின் ஃபார்ச்சூன் (Fortune) இதழ் தெரிவித்துள்ளது. ஃபார்ச்சூன் ஆண்டுதோறும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியலை வெளி யிட்டு வருகிறது. அந்தப் பட்டிய லில் இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அருணாசலம் முருகானந்தம் 45 வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவின் பத்மஸ்ரீ உள் ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று இருக்கும் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்தவரான திரு முருகானந்தம், பெண்களுக்கான 'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு இயந்திரம் மூலம் பலரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
உலகின் தலைசிறந்த 50 பேரில் ஒருவர் கோவை முருகானந்தம்
1 mins read

