4 பேருந்துகள் மோதல்; 40 பேர் காயம்

4 பேருந்துகள் மோதல்; 40 பேர் காயம்

1 mins read
fecd0ace-9af6-4955-8083-917e05c8374d
-

ஆலங்குளம், நெல்லை, கொடைக்கானல், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு சிறு பேருந்துகள் உளுந்தூர் பேட்டையில் நேற்று அதிகாலையில் மோதிக்கொண்டன. இதில் உடன்குடியில் இருந்து சென்ற பேருந்தும் கொடைக் கானலைச் சேர்ந்த பேருந்தும் பலத்த சேதமடைந்தன. பேருந்துகளில் இருந்த 40 பயணிகள் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது. படம்: தமிழக ஊடகம்