பெரம்பலூர்: அண்மையில் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமைச் சம் பவத்தைவிட இன்னும் மோசமான சம்பவம் ஒன்று பெரம்பலூரில் நிகழ்ந்து இருக் கிறது என்று போலிசிடம் புகார் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருக் கிறார். அந்தப் பெண்களை அவர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி இருக்கிறார். இந்தக் காரியத்தை அந்த எம்எல்ஏ பலருடன் சேர்ந்து செய்திருக்கிறார்.
பெண்களுடன் உல்லாசமாக இருந் ததைக் காணொளிப் படம் எடுத்து அதை வைத்து அந்தப் பெண்களை மிரட்டி அவர்களை பலருக்கும் விருந்தாக்கி இருக் கிறார் என்று பெரம்பலூரைச் சேர்ந்த அருள் என்ற வழக்கறிஞர் போலிசிடம் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசிடம் புகார் தெரிவிக்க சென்றபோது, போலிசார் அந்த எம்எல்ஏவுக்குச் சாதக மாக நடந்து கொண்டு புகார் கொடுக்க வந்த பெண் களை மிரட்டி இருக்கிறார்கள்.
பெண்களுக்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளன என்று தெரிவித்துள்ள அந்த வழக்கறிஞர், பாலியல் கொடுமை காணொளிகளையும் ஒலிப்பதிவுகளையும் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாக மிரட்டி இருக்கிறார்.
இந்தப் புகாரையடுத்து பெரம்பலூரில் தனி போலிஸ் படை அமைக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்து இருப்பதாக ஊடகச் செய்தி குறிப்பிட்டு உள்ளது.