விழிப்பு நிலையில் தமிழகம்

சென்னை: இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று பல இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போலிஸ் முழு விழிப்பு நிலையில் இருந்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல நகர் களிலும் போலிஸ் துறைகள் முழு விழிப்பு நிலையில் வைக்கப் பட்டிருக்கின்றன. நாகப்பட்டினத் தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு டிஎஸ்பி தலை மையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தரங் கம்பாடி டேனிஸ் கோட்டையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னையில் உள்ள பாரி முனை, சாந்தோம் பெசன்ட் நகர் தேவாலயங்களுக்கும் ரயில் நிலை யங்களுக்கும் பேருந்து நிலையங் களுக்கும் வணிகப் பகுதிகளுக் கும் கடுமையான பாதுகாப்பு உத் தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல தனுஷ்கோடி கடலில் மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையில் பயங்கரவாத நிகழ்வுகளை அரங்கேற்றியவர்கள் கடல்வழியாகத் தப்பி தமிழக கடற் கரைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசாங்கம் அந்தப் பகுதிகளில் கண்காணிப் பைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
கடலோர சோதனைகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன.
ராமேஸ்வரம் கோயில் உட்பட பிரபலமான வழிபாட்டுத் தலங் களுக்கு கடும் பாதுகாப்பு போடப் பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் சுற்றுக்காவல் பணியில் போலிஸ் ஈடுபட்டு வருகிறது. உளவுத்துறையும் முடுக்கிவிடப் பட்டு உள்ளது.
சந்தேக நபர்கள் தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகின்ற னர். வாடகை வீடுகளில் சந்தேகத் திற்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடந்துகொண்டால் அது பற்றி உடனே 100 என்ற எண் ணுக்குத் தகவல் தெரிவிக்கும்படி போலிஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.
சென்னை திருவெற்றியூரி லிருந்து ராமநாதபுரம் கடற்கரை வரை பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த போலிசார் தீவிர சுற்றுக் காவல் பணிகளில் ஈடுபட்டு வரு வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் கடற்கரை யில் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!