சென்னை: சென்னை மெரினாவில் ஜெயலலிதா விற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா வுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பிரச்சினையில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜெயலலிதா நினைவிட எதிர்ப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது
1 mins read

