வேலூர்: வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி பாலாறு மற்றும் கலவையில் உள்ள கமண்டல நாகநதி ஆகிய பகுதி களில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளப்படுவதாக போலி சுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட போலிசார், பாலாறு, கமண்டல நாகநதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 14 பேரைக் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த 14 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வண்டிகளுடன் மாடுகளையும் சேர்த்து அதிகாரி கள் கொண்டுசென்றனர். அவர் கள் மீது வழக்குப் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஏராளமான மாட்டு வண்டிகள் மணல் அள்ளி பிடிபட்டன
1 mins read

