சென்னை: தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி புயல் கரையைக் கடக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும், கடும் மழை பெய்யும் என்றும் மையம் கூறியது.
அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரை யேறக்கூடும் என்றும் தெரிவித் துள்ள அந்த மையம், இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக் குச் செல்லக்கூடாது என்றும் அறி வுறுத்தி இருக்கிறது.
இந்தப் புயலுக்கு 'ஃபானி' என்று பெயர் சூட்டப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறின.
இதனிடையே, கன்னியாகுமரி மேற்குக் கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படு கிறது. 50க்கும் அதிக வீடுகளில் கடல்நீர் புகுந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
கடல் அலைகள் 10 அடி வரை எழும்புவதாகவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 500க் கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டு இருப் பதாகவும் தகவல்கள் கூறின.
இவ்வேளையில், நாகை மாவட் டம் வேதாரண்யம் அருகே மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர் கள் கரை திரும்பவில்லை என் பதால் அவர்களை உள்ளூர் மீன வர்கள் படகு மூலம் தேடி வருவ தாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

