நகர ரயில்: 2,865 வீடுகள், கடைகள் இடிப்பு; ரூ.10,000 கோடி இழப்பீடு

நகர ரயில்: 2,865 வீடுகள், கடைகள் இடிப்பு; ரூ.10,000 கோடி இழப்பீடு

1 mins read

சென்னை: சென்னை மாதவரம் - சோழிங்கநல்லூர் நகர ர­யில் திட்­டத்துக்காக 2,865 வீடு­க­ளும் கடை­க­ளும் இடி­க்­கப்­படு­கின்றன. பாதி­க்­கப் படுவோருக்கு ரூ.10,000 கோடி இழப்பீடு வழங்கப்­படுகிறது.

­சென்னை மாநகர்ப்­ போக்­குவ­ரத்து நெருக்கடி­யைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவா­க்­கப் படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு, ஆலந்தூர், சின்னமலை, விமான நிலையம் வரை மேல்மட்டப்­ பாதை­யும் திருமங்கலம், சென்ட்ரல், சைதாப்பேட்டை, வண்ணாரப்­ பேட்டை வரை சுரங்கப்­ பாதை­யும் அமை­க்­கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.

மாதவரம் - சோழிங்க நல்லூர் வரை 118.9 கி.மீ. வழித்தடம் இரண்­டாவது கட்டமாக உருவா­க்­கப் படுகிறது. இதற்­கான நிலம் கையகப்­படுத்­தும் பணிகள் நடந்து வரு­கின்றன. இந்த ஆண்டு இறுதிக்­குள் கட்டு­மானப்­ பணிகள் தொடங்கப்­படும்.

இந்த ரயில் திட்­டத்தால் 2,865 குடும்பங்கள் பாதி­க்­கப் பட்டுள்­ளன. 777 குடும்பங்கள் வாழ்வாதா­ரத்தை இழந்து உள்­ளன. சிறுசேரி, சிப்காட் பகுதி­க­ளில் 97 குடும்­பத்தி­னர் வீடு­களை­யும் 279 பேர் கடைகள், வணிகப்­ பகுதி­களை­யும் இழந்­து­ள்­ளனர்.