ராசிபுரம்: தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிறப்புச் சான்றிதழுடன் குழந்தை கள் விற்கப்படுவதாகப் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
பத்து ஆண்டுகள் தாதியாக வேலைபார்த்த அமுதா என்ற பெண்மணி, தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு குழந்தை விற்பனை தொழிலில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாகக் கூறும் ஓர் ஒலிப்பதிவு இணையத்தில் அதிர்ச் சியைக் கிளப்பி வருகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் முதற்கட்ட விசாரணை யைத் தொடங்கும்படி தமிழக அரசின் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சிவப்பு நிறத்தில் மூன்று கிலோ எடையுள்ள ஆண் குழந்தை வேண்டுமானால் ரூ.4 லட்சத் துக்கு வாங்கலாம் என்றும் பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் கொடுத்தால் போதும் என்றும் சொல்லி குழந்தை விற்பனைத் தொழிலில் ஒரு பெரும் கும்பலே செயல்பட்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கூடுதலாக ரூ.70,000 கொடுத் தால் பிறப்புச் சான்றிதழும் பெற்றுத் தரப்படும் என்றும் தெரிகிறது.
இணையத்தில் புழங்கும் ஒலி நாடாவைச் செவிமடுக்கையில், அதில் அமுதா என்ற பெண்மணி, தான் 30 ஆண்டு காலமாக குழந் தைகளை வாங்கி விற்று வருவ தாகவும் இதற்காகவே தான் இரு ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டதாகவும் கூறுவதைக் கேட்க முடிகிறது.
குழந்தைகளின் விவரம், முன் பணமாக ரூ.30,000 கொடுக்க வேண்டிய நிபந்தனை எல்லாம் அந்த ஒலிப்பதிவில் இடம்பெற்று இருக்கின்றன. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அமுதாவைக் கைதுசெய்து போலிஸ் விசாரித்து வருகிறது.
இந்தச் சட்டவிரோத குழந்தை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் கும்பல், வெளிமாநிலங் களில் இருந்தும் குழந்தைகளைத் திருடி வந்து விற்பதாகவும் இந்தக் கும்பலுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் குழந்தையைத் தத்தெடுப்பது என்பது சட்ட ரீதி யில் பெரிய ஒரு பிரச்சினையாக இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளை இந்தக் கும்பல் அணுகுகிறது.
ஏழைக் குடும்பங்களில் பிறக் கும் குழந்தைகள், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தை கள் ஆகியவற்றை அத்தகைய பிள்ளையில்லாத தம்பதியிடம் விற்று இந்தக் கும்பல் பெரும் காசு பார்க்கிறது என்று கூறப்படுகிறது.
இந்தச் சட்டவிரோத காரியம் பற்றி அதிகாரிகள் இப்போது பரபரப்பாக விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

