பொள்ளாச்சி, பெரம்பலூர் சம்பவங்கள்: ஆளும் கட்சிக்கு திமுக தலை­வர் ஸ்டா­லின் எச்சரிக்கை

பொள்ளாச்சி, பெரம்பலூர் சம்பவங்கள்: ஆளும் கட்சிக்கு திமுக தலை­வர் ஸ்டா­லின் எச்சரிக்கை

1 mins read

சென்னை: பொள்ளாச்சி, பெரம் பலூர் பாலியல் கொடுமைகள் தொடர்­பில் முதல்­வர் பழனிசாமியை திமுக தலை­வர் ஸ்டா­லின் கடுமை யாக எச்சரித்­துள்­ளார்.

பொள்ளாச்சி விவகா­ரத்­தில் ஆளும் கட்சி­யின் முக்­கியப்­ புள்ளி க­ளுக்கு எதி­ரான ஆதாரங்­களை எல்லாம் அழித்­துவிட்டு, பிறகு சிபிஐயிடம் வழக்கு விசார ணையை ஒப்படைக்கலாம் என்று முதல்­வர் முயலக்கூடாது என்று அவர் வலியுறுத்­தி­னார்.

அதேபோல், பெரம்பலூர் விவ காரத்தைக்­ மூடி மறைத்து அதிமுக எம்எல்ஏவைக்­ காப்பாற்றிவிடலாம் என்று முதல்­வர் கன­வில்கூட நினைத்­துவிடக்கூடாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பொள்ளாச்சி பாலியல் விவ காரம் அடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் பாலியல் சம்பவம் பற்றி­ தெரியவந்து இருப்பது தமிழக மக்­க­ளுக்கு, குறிப்பாக பெண்­க­ளுக்­குப்­ பெரும் அதிர்ச்சி யை­யும் பயத்தை­யும் ஏற்­படுத்தி இருப்பதாக­வும் இந்த இரண்டு விவகாரங்­களை­யும் மூடி மறைக்­ கும் விதத்­தில் அதிமுக அரசு செயல்­படுவது வருத்தமாக இருக்­ கிறது என்­றும் ஸ்டா­லின் தெரி வித்து இருக்­கி­றார்.

பெண்­களைப்­ பயத்தி­லும் பதற் றத்தி­லும் வைத்து இருப்பது ஓர் அரசுக்கு அழகல்ல என்பதை­யும் தான் வகிக்­கும் பதவிக்­கும் அது அழகல்ல என்பதை­யும் முதல்­வர் உணரவேண்­டும் என்­றும் திமுக தலை­வர் ஸ்டா­லின் அறிக்கை ஒன்­றில் கோரிக்கை விடுத்­தார்.

இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்­கில் கைது செய் யப்பட்ட ஐந்து பேர் மீதும் கூடுதல் பாலியல் வன்­கொடுமை என்ற பிரி­வின் கீழ் சிபிசிஐடி போலிஸ் மேலும் குற்றங்­களைச்­ சுமத்தியது. இவை ஆயுள் தண்ட­னைக்கு வழி வகுப்பவையா­கும்.