சென்னை: சென்னையில் அமிஞ் சிக்கரையில் தனியார் மருத்துவ மனை ஒன்றில் வேலை பார்க்கும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கந்தர்பதாஸ், 24, என்ற நக்சலைட் தீவிரவாதியைக் கைதுசெய்து போலிஸ் விசாரித்து வருகிறது.
இந்த நபர், மேற்கு வங்காளத் தில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட தற்காக சிறையில் இருந்தவர். அங்கு பிணையில் வெளிவந்த இவர், சென்னை வந்து வேலை யில் சேர்ந்து இருக்கிறார்.
இந்த ஆசாமி சென்னை வந் தது ஏன் என்பது தொடர்பில் போலிஸ் விசாரித்து வருகிறது.
இந்த நபர் உல்ஃபா பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பில் சென்னையில் போலிஸ் பாதுகாப்பும் சோதனைகளும் அதிகரித்துள்ள நிலையில் இந்த நபர் பிடிபட்டு இருப்பது பல சந் தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனிடையே, சென்னையில் பல இடங்களில் குண்டு வைத்து இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மைக்கேல் பிரீடி என்பவரை போலிஸ் மும்முரமாகத் தேடி வருகிறது.
35 குண்டர்கள் பிடிபட்டனர்
சேலம்: சேலம் மாநகரப் பகுதி களில் பல்வேறு குற்றச் சம்பவங் களில் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட குண்டர்களை போலிஸ் கைது செய்து உள்ளது.
கைது நடவடிக்கை தொடரும் என்று சேலம் மாநகரக் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
கொலை, கொள்ளை, வழிப் பறி, அச்சுறுத்தல் போன்ற பல் வேறு சம்பவங்களில் ஈடுபட்ட இந்தக் குண்டர்கள் பல காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.