சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய் யப்படலாம் என்று தகவல் வெளி யானதால் அரசியல் களத்தில் பரபரப்பு கூடி இருக்கிறது.
அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு மூவரும் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண் டார். இந்த நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரனும் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முக மும் நேற்று சபாநாயகர் தனபாலை சந்தித்துப் பேசினர்.
அந்த எம்எல்ஏக்கள் அதிமுக வுக்கு எதிராக செயல்படுவதற்கான காணொளி ஆதாரங்களைத் தாக் கல் செய்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.
அவர்களுக்கு விளக்கக் கடிதம் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் எம்எல்ஏக் களின் பதிலைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரியவந்துள்ளது.

