சென்னை: ஆசிய திடல்தட போட் டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத் தில் தங்கப்பதக்கம் வென்ற தமி ழக வீரமங்கை கோமதியைக் கௌரவப்படுத்தும் வகையில் அஞ்சல்தலை அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கோமதியைப் பாராட்டி ஊக்கு விக்கும் வகையில் அஞ்சல்தலை சேகரிப்பாளர் விஜயகுமார், ரகுபதி, லால்குடி விஜயகுமார் இருவரும் இந்திய அஞ்சல்துறை 'மை ஸ்டாம்ப்' திட்டத்தில் அஞ்சல்தலை அச் சிட்டு வழங்கினார்கள்.
அஞ்சல்தலையினைத் திருச்சி முடிகண்டம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் தடகள வீராங்கனை கோமதியிடம் வழங்கினார்கள்.
அஞ்சல் தலையில் தங்க மங்கைக் கோமதி தங்கப் பதக்கத்துடன் செங்கோட்டை புகைப்படமும் உள்ளது.