சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செய லாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் நோயாளிகள் ஐவர் பலியாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
வழக்கம் போல இதனையும் மூடிமறைக்க முயலாமல் முறையான விசாரணை நடத்த வேண்டும். நோயாளிகள் பலியாவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.