சென்னை: பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி (படம்) பணியிடங்களில் பெண் களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச் சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட 'மீடூ' இயக்கத் தில் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தமக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளையும் மற்றவர் களுக்கு நிகழ்ந்த சம்பவங்களை யும் வெளியே கூறினார்.
அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்ச நீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித் திருந்தார். இந்தப் புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய் துள்ளார். போராட்டத்திற்கு அனு மதி வழங்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் அலுவல கத்தில் மனு அளித்துள்ளார்.
இது குறித்து சின்மயி அளித் துள்ள பேட்டியில், "நான் கமிஷ னர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம், 'சென்னை யில் யாரும் இதுகுறித்து போராட் டம் நடத்த அனுமதி கேட்கவில் லையே?' என்றுதான் கேட்டார்.
"அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறி னேன். காவல் துறையினர் என் னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான தேதிகளையும் இடங் களையும் குறிப்பிடச் சொன்னார் கள்.
"நான் வள்ளுவர் கோட் டத்தைக் குறிப்பிட்டுள்ளேன். இன்று வரை எனக்கு மிரட்டல் களும் அச்சுறுத்தல்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக வெளி யில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளைக் கூறவேண்டும்," என்றார்.
சின்மயியின் போராட்டத்துக்கு சில மகளிர் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.