திருச்சி: துபாயிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று முனதினம் ராஜா என்பவர் ரூ. 5.63 லட்சம் மதிப்புடைய தங்கத்தைத் தனது பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரது பெட்டியைச் சோதனையிட்ட போது தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சென்னை விமான நிலையத் தில் கண்காணிப்பு தீவிரம டைந்ததால் திருச்சி வழி தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது.

