வறட்சி: ஏரி குட்டையாகியது

வறட்சி: ஏரி குட்டையாகியது

1 mins read
a72540eb-1dde-4c05-9047-21d2574d1f34
எடப்பாளையம் ஏரியின் நிலை. படம்: தமிழக ஊடகம் -

திருவண்ணாமலையில் உள்ள எடப்பாளையம் ஏரி கடும் வறட்சி காரணமாக வறண்டு குட்டைபோல ஆகிவிட்டது. இங்குள்ள பல கிராமங்களில் கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்கள், பூஞ்செடிகள் எல்லாம் போதிய நீரின்றி கருகி விட்டன. நாளுக்கு நாள் குடிநீர்ப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதனிடையே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போது முழுவதுமாக வறண்டுவிட்டது.